2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காணாமற்போனோரைக் கண்டறியும் அமைச்சு உருவாக்கப்படும்

Menaka Mookandi   / 2016 மார்ச் 01 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

காணாமற்போனோரைக் கண்டறியும் அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, பரணகம மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'உறவினர்களின் சாட்சிய விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் கையளிப்பேன். அங்கு அதற்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளை அவ்வமைச்சு முன்னெடுக்கும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X