2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 16 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஆட்டுக்கு குழை பிடுங்கியவர், கிணற்றில் தவறி வீழ்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பழை  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்னாலை தெற்கு தெல்லிப்பளை பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னப்பு சிவபிரகாசம் வயது(68) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆட்டுக்கு குழை பிடுங்கச் சென்றவரை காணாத நிலையில்,  அடுத்த நாள் காலை கிணற்றில் இருந்து சடலமாக கண்டுபிடிக்கபட்டுள்ளார்.

 தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், மல்லாகம் நீதிமன்ற உத்தரவினை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த திடிர் மரண விசாரணை அதிகாரி ஜேக்கப் கிறிஸ்தோபர், மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X