Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Gavitha / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
பொலிகண்டி கடற்கரையில் 60 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞனொருவரை ஞாயிற்றுக்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை, இன்பசிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளவாலைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இது தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்தலத்துக்கு வரைந்த பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர்.
குறித்த இளைஞனை இந்தக் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் கடற்கரையில் வைத்திருந்ததாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago