2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கசிப்பு காச்சியவருக்கு 1வருட கடூழிய சிறை

Sudharshini   / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, சாந்தபுலம் பகுதியில் கசிப்பு காய்ச்சிய நபருக்கு 1 வருட கடூழியச் சிறைத்தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வெள்ளிக்கிழமை (13) தீர்ப்பளித்தார்.

அபராதம் செலுத்தத் தவறின் மேலும் 6 மாதகால சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 9 ஆம் திகதி 1,500 மில்லிலீற்றர் கசிப்புடன் கிளிநொச்சி பொலிஸாரால் மேற்படி நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேற்படி நபர்,  இதற்கு முன்னரும் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்ததோடு, அவருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .