2025 ஜூலை 19, சனிக்கிழமை

கசிப்பு காய்ச்சிய குடும்பஸ்தர் கைது

Niroshini   / 2016 ஜனவரி 04 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம், தவசிக்குளம் பகுதியில் கசிப்பு காய்ச்சிய குடும்பஸ்தர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 3,500 மில்லிலீற்றர் கசிப்பு, 10 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா மற்றும் காய்ச்சுவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டைச் சுற்றி வளைத்த பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X