Freelancer / 2022 நவம்பர் 30 , பி.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
தெல்லிப்பளை கிழக்கு பகுதியில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கை ஈடுபட்ட பெண் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
உப பொலிஸ் பரிசோதகர் முருகேசன் பிள்ளை கலாவினோதன் தலைமையிலான பொலிஸ்
குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 8.250 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா என்பன
கைப்பற்றப்பட்டுள்ளன.
வீட்டின் பின்புறத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில்
இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த பெண்ணை மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .