Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2020 மே 17 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மீறியுள்ளதாக யாழ். பொலிஸாரால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அந்த முன்னணியின் 11 பேரை தனிமைப்படுத்துமாறு, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல், இன்று (17) உத்தரவு பிறப்பித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகளில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், அதன் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்ட ஆலோசகர்களான சுகாஸ், காண்டீபன், யாழ். மாநகரசபை உறுப்பினர்களான பார்த்தீபன், தனுசன், கிருபாகரன், விஸ்ணுகாந்த, சுகாதாரன், தமிழ்மதி உள்ளிட்ட 11 பேரையே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து, 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு, அந்தந்தப் பிரதேச வைத்திய அதிகாரிகளுக்கு நீதவான் பணித்துள்ளார். இதையடுத்து, நீதவானின் கட்டளையை, இன்றைய தினம், பொலிஸார், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் வீடுகளுக்குச் சென்று கையளித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago