2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா பீடியுடன் இளைஞர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

கஞ்சா பீடியை வைத்து புகைத்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், நேற்யை தினம் (16), கோண்டாவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபர் இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்ற இளைஞனைப் பிடித்து, விசாரணை செய்த போது, கஞ்சா பீடியினை வைத்து நுகர்ந்து கொண்டிருந்ததாக, பொலிஸார் கூறினர்.

கைதான நபரை, யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X