2025 ஜூலை 16, புதன்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 05 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், செல்வநாயகம் கபிலன்

 

யாழ். - சங்கானை பகுதியில், கேரளா கஞ்சாவுடன் இருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று  இரவு (05) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஏழாலை மற்றும் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 32, 42 வயதுடைய இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொண்ட பரிசோதனையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, 2 கிலோவும் 650 கிராமும் நிறையுடைய கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள், மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .