Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
பருத்தித்துறை, முனைக்கடலில் திங்கட்கிழமை (28) அதிகாலை படகு மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காணாமற்போயுள்ளதாக பருத்தித்துறைமுனை மீனவர் சங்கம் தெரிவித்தது.
முனைப் பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ஜெனிபட் (வயது 28) என்பவர் உயிரிழந்ததுடன், எஸ்.ஜோர்ஜ் (வயது 42) என்பவர் காணாமற்போயுள்ளார்.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு முனைப் பகுதியிலிருந்து ஒரு படகில் 3 மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். கடற்கொந்தளிப்பால் அவர்களது படகு கடலில் கவிழ்ந்ததில், மூவரும் கடலுக்குள் மூழ்கியுள்ளனர்.
இதில் ஒருவர் நீந்திக் கரை சேர்ந்தார். மற்றைய ஒருவரை பிறிதொரு படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். 3ஆவது மீனவர்கள் காணாமற்போயுள்ளார்.
அவரைத் தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago