2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கணவனின் கத்தி வெட்டுக்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

Editorial   / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது கணவனின் கத்தி வெட்டுக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று, யாழ்ப்பாணம், மீசாலை - புத்தூர் சந்தி, ஏ - 9 வீதியில், நேற்று  (03) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் முகுந்தன் சர்ஜினி (வயது 26) என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரே, இவ்வாறு கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக, கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், கையில் வெட்டுக்குள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடமைக்குச் சென்றுத் திரும்பும் வழியில், தனது கணவனே தன்னை வெட்டியதாக, குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .