2025 ஜூலை 23, புதன்கிழமை

கமநல சேவை நிலைய கட்டடங்கள் அமைக்க வேண்டும்

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 3 கமநல சேவைகள் நிலையத்தின் கட்டடங்கள் அமைக்க 33 மில்லியன் ரூபாய் நிதி தேவையென மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாண்டியன்குளம், புதுக்குடியிருப்பு மற்றும் வெலிஓயா ஆகிய கமநல சேவை நிலையங்களின் கட்டடங்கள் அமைக்க தலா 11 மில்லியன் ரூபாய் தேவையாகவுள்ளது. இதனைவிட, கமநல சேவை நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் இருந்து அதிக தூரத்தில் வசிக்கும் விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு 2 உர களஞ்சியங்கள் அமைக்க வேண்டிய தேவையுள்ளது. இந்த உரக் களஞ்சியங்கள் அமைக்க தலா 3 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகின்றது.

கமநல சேவை நிலைய கட்டடங்கள் மற்றும் உரக்களஞ்சியம் ஆகியவற்றை அமைப்பதற்காக நிதித் தேவை குறித்து, மாவட்டச் செயலகத்துக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நிதி கிடைத்தவுடன் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு இந்தச் செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .