Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
எம். றொசாந்த் / 2018 ஜனவரி 24 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். ஊர்காவற்றுறை பகுதியில், கடந்த வருடம் இடம்பெற்ற, கர்ப்பிணி பெண் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகளை, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று (24) உத்தரவிட்டார்.
யாழ். ஊர்காவற்றுறை பகுதியில், கர்ப்பிணி பெண்ணான ஹம்சியா கடந்தவருடம் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (24) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த வழக்கில் பொலிஸார் மந்த கதியிலேயே விசாரணைகளை மேற்கொள்கின்றனர். இச் சம்பவம் தொடர்பான மரபணு அறிக்கையை பெற்றுக்கொள்வதில் தாமதப்படுத்துகின்றனர். மேலும் சந்தேகநபர்கள், சம்பவம் இடம்பெறும் போது, சம்பவ இடத்தில் இருந்தார்கள் என்பது தொடர்பான வீடியோ காணொளிகளை மன்றுக்கு சமர்பித்த போதும், அது தொடர்பான புகைப்படங்களை இன்னமும் சமர்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, பொலிஸார், மரபணு அறிக்கையை பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
இதன்போது, குறித்த வழக்கின் விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பாரப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், இவ் வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago