Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2017 நவம்பர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
கோப்பாய் நாவலர் வித்தியாலய கற்றல் செயற்பாடுகள் தடைப்படாது இருப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண கல்வி அமைச்சில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“நிதி முறைகேடுகளில் அதிபர் ஈடுபட்டமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, தன்னை நேரில் சந்தித்த போதும், குறித்த பாடசாலையின் அதிபர் தன் மீதான பாடசாலையினது நிதியை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார்.
“இந்நிலையில், அதிபர் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவ்விசாரணைகள் நியாயமாக நடைபெற ஏதுவாக குறித்த அதிபர் கோட்ட கல்வி அலுவலகத்துக்கு தற்போது இணைப்பு செய்யப்பட்டுள்ளார்.
“இதேவேளை, அதிபர் மீதான விசாரணைகளை காரணங்காட்டி மாணவர்களது கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. நிர்வாகத்தை சுமூகமாக இயக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகள், அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் திட்டமிடல்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்து கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
17 minute ago