2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காதல் வலைக்குள் வீழ்த்தி மாணவிகள் ​துஷ்பிரயோகம்

Freelancer   / 2022 ஜூன் 24 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில்  பாடசாலை  மாணவிகள்  பலர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றில்  பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் பலரை தேடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு,  பாலியல் சேட்டை புரிந்து  பாலியல்  துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.  

குறிப்பாக அவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக  நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு  வந்த நிலையில், குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து மாணவிகள் பலரின்   நிர்வாண புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

இவ்வாறு ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் சிலரும் செய்த சேட்டையை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை எடுத்து பார்வையிட்டபோது  பல மாணவிகளின்  நிர்வாணமாக  எடுத்துக்கொண்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மாணவிகளுடன் உடலுறவு கொண்ட  வீடியோக்கள் குறித்த தொலைபேசியில்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஆசிரியர்  மாணவர்களை பயன்படுத்தி மாணவிகளை காதல் வலையில் விழுத்தி,  அந்த மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை பெற்று ஆசிரியரும் அந்த மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியருடைய தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட  மாணவிகள் சிலரை விசாரணைக்கு அழைத்து   அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது ஒரு மாணவியை ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் குறித்த ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலையில் ஆசிரியரோடு சேர்ந்து இவ்வாறான குற்றச் செயல்களை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 6 மாணவர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்த ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஏனைய ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக இருந்த ஆசிரியர் இன்று  சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இதையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றத்தின்  நீதிபதி ரி.சரவணராஜா குறித்த நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .