Freelancer / 2024 பெப்ரவரி 06 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழில். இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 14 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரகுராம் சந்திரா எனும் 14 மாத குழந்தையே நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தைக்கு காய்ச்சல் காரணமாக பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, காய்ச்சலின் தீவிரம் காரணமாக குழந்தையை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து , குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. R
8 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026