Editorial / 2018 நவம்பர் 20 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா
யாழ்., கந்தர்மட பகுதியில் இன்று (20) மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற கார் - ரயில் விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் கந்தர்மட பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் காரைச் செலுத்திச் சென்ற யாழில் உள்ள பிரபல வர்த்தகரான பாலா என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த வர்த்தகர் ஆபத்தான முறையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago