2025 மே 12, திங்கட்கிழமை

கால்நடைகளுக்கு காதடையாளம் இடும் பணி

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கால்நடைகளுக்கு, காதடையாளம் இடும் நடவடிக்கை, திங்கட்கிழமை (10) ஆரம்பமானது.

காரைநகர் கால்நடை வைத்திய நிலையமும் பிரதேச செயலகமும் இணைந்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

ஜே-42/43 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கால்நடைகளுக்கு காதடையாளம் இடப்பட்டது.

ஓகஸ்ட் 14ஆம் திகதியன்று, ஜே-44 கிராம சேவையாளர் பிரிவில் இப்பணி இடம்பெறும். தொடர்ந்து, உரிய திகதி அடிப்படையில் மாடுகளுக்கு காதடையாளம் இடப்படும்.

இச்செயற்பாட்டுக்கு, அனைத்து பண்ணையாளர்களையும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X