Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
செல்வநாயகம் கபிலன் / 2018 ஜனவரி 30 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.கந்தர்மடம் பகுதியிலுள்ள வீட்டு கிணற்றிலிருந்து மூதாட்டியொருவரின் சடலம் நேற்று (29) மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் இராசலிங்கம் நீலாம்பிகை (வயது 74) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மூதாட்டியும் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். எனினும் அங்கு ஒவ்வாமை காரணமாக மீண்டும் இலங்கைக்கு திரும்பிய மூதாட்டி உறவினர்களுடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (29) மூதாட்டியை காணவில்லை என உறவினர்கள் தேடியபோது, கிணற்றினுள் சடலம் தென்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago