Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 01 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
"வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இப்போது குழப்பத்தில் இருக்கிறார். தன்னிடம் 3 தெரிவுகள் இருந்தாகவும் பின்னர் 4 தெரிவுகள் உள்ளதாகவும் நேற்று உரையாற்றிய முதலமைச்சர் கூறியுள்ளார். நாள் செல்ல..செல்ல.. தெரிவுகள் அதிகரிக்க வாய்புக்கள் உள்ளமையினால் அவர் மனம் தெளிந்து தனது முடிவை வெளிப்படுத்தவேண்டும். முதலமைச்சர் தனது தெரிவை வெளிப்படுத்திய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தெரிவை வெளிப்படுத்தும். எனவே அடுத்துவரும் வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் உறுதியான முடிவை எடுக்கவில்லை. முதலமைச்சரின் முடிவுக்காக காத்திருக்கின்ற"து என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகள் குறித்து பருத்தித்துறையில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. நேற்று முதலமைச்சர் உரையாற்றும்போது தன் முன் 3 தெரிவுகள் முன்னர் இருந்ததாகவும்தற்போது 4 தெரிவுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆகவே நாட்கள் செல்ல.. செல்ல.. தெரிவுகளின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புக்கள் உள்ளது. அவருடைய மனக் குழப்பங்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல. ஆகவே அவர் தனது மனக்குழப்பம் தெளிந்து தெளிவான ஒரு தெரிவை கூறியதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும். நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் முதலமைச்சர் தான் சார்ந்த கட்சிக்கு எதிராக செயற்பட்டதனை வெளிப்படையாக
கண்டித்தவன் நான். அப்போது நான் பேசியது தவறு என கூறியவர்கள் இப்போது நான் கூறியது அனைத்தும் சரியென கூறுகிறார்கள்.
மாகாணசபை தேர்தல் காலத்தில் தான் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு
வாக்களியுங்கள் என கேட்ட முதலமைச்சர் நாடாளுமன்ற தேர்தலில் வீட்டைவிட்டு வெளியேறி வாக்களியுங்கள் என கூறியவர் இனியும் கட்சிக்குள் இருப்பதற்கு தகுதியற்றவர். எனவே தமிழ் மக்களுடைய சுயமரியாதைக்காக போராடும் கட்சி தனது சுயமரியாதையை இழக்க முடியாது" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
7 hours ago