2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கூட்டமைப்பின் தவிசாளரை வழிமொழிந்தது ஐ.தே.க

Editorial   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம் வலி.தென்மேற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில், தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்ட போது, அவரை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் வழிமொழிந்த சம்பவம் இன்று (02) இடம்பெற்றுள்ளது.

உள்ளுராட்சி சபைகளுக்கான தவிசாளர்கள், தெரிவுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் வலி.தென்மேற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவும் இன்று (02) இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த வலி.தென்மேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் மீண்டும் தவிசாளராக இன்று (02) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய பெயரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் முன்மொழிய, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் வழிமொழிந்துள்ளார்.

உபதவிசாளராக சின்னையா கணேசவேல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .