2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல்

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில்  யாழ் மாவட்டத்தில்  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான  கலந்துரையாடல் இன்று மாலை,  மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலமை செயலகத்தில் இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சியில் 7 வேட்பாளர்களும் புளட் அமைப்பின் இருவருடன் ரேலோவைச் சேர்ந்த ஒருவருமாக கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் அதற்கான பரப்புரைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன.

இதன்போது அதிக ஆசனங்களைப் பெறும் வகையில் செயற்படும் வழிவகைகளும் தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் சந்திப்புகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டன.

கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் உள்ளிட்ட சில கட்சியின் மூத்த செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கூட்டம் நிறைவுற்றதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X