Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
எம். றொசாந்த் / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
“யாழ்ப்பாணத்துக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவை, தங்களின் தலைமுடி மீது நடந்து செல்ல கோரியவர்கள், யாழ்ப்பாணப் பெண்கள்” என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று (05) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“1960ஆம் ஆண்டு காலப் பகுதி என நினைக்கிறேன். சிறிமோவோ பண்டாரநாயக்க யாழ்ப்பாணம் வந்த போது, இங்குள்ள பெண்கள் தமது தலைமுடியை விரித்து மண்டியிட்டு இருந்து, தமது தலைமுடி மீது நடந்து செல்லுங்கள் என கூறினார்களாம்;. அவ்வாறு வரவேற்பளித்தவர்கள் யாழ்ப்பாணத்தவர்.
ஆனால் சிறிமாவோ, என்னை அவ்வாறு வரவேற்பது மகிழ்ச்சி. ஆனால் தமிழ்த் தாய்மார்களின் தலைமுடி மீது கால் வைத்து, நான் நடக்க மாட்டேன் என மறுத்தார்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago