Editorial / 2018 மார்ச் 28 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
“உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை, சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். கந்தர்மடம் அரசடி வீதியில், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சரிடம், ஈ.பி.டி.பி கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தொடர்பில், ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஈ.பி.டி.பி கட்சியுடன் தாங்கள் பேரம் பேசவில்லை என்றும், ஈ.பி.டி.பி தமக்கு நேரடியான ஆதரவு தரவில்லை என்று ஊடகங்களுக்கு கூறியுள்ளார். எவ்வாறாயினும், ஒருமித்து நியமனங்கள் நடைபெறவில்லை என்று தெரிகின்றது.
ஆகவே பதவி வகிக்கின்றவர்கள் ஆட்சியை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும். சாவகச்சேரி நகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு, ஈ.பி.டி.பி கட்சி ஆதரவு வழங்கியது என்பது தொடர்பில் சரியாக நான் அறியவில்லை.
என்னவாக இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவுடன் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைத்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளை கைவிட்டது” என்றார்.
3 minute ago
21 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
21 minute ago
39 minute ago
1 hours ago