Mayu / 2024 ஏப்ரல் 28 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சி a9 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று புரண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை (28) காலை யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் பின் சில்லு திடீரென காற்று போனதால் குறித்தடிப்பர் வாகனம் ஏ09-வீதியின் நடுவே புரண்டுள்ளது.

விபத்தில் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் ஏ 09 வீதியுடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago