2025 ஜூன் 30, திங்கட்கிழமை

துணுக்காயில் காலபோக நெற்செய்கை தொடர்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை

Gavitha   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளுக்கு காலபோக நெற்செய்கையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் துணுக்காய் பிரதேச செயலகத்தால் அறிவித்தல் விடப்பட்டுள்ளது.

துணுக்காய் பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் ச.நந்தசீலன், துணுக்காய் கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.பிரபகாரன் ஆகியோரால் பிரதேச செயலகத்துக்குட்பட்ட விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டு வருகின்றன.

வவுனிக்குளம், மல்லாவிக்குளம், தேராங்கண்டல்குளம், கல்விளாங்குளம், பழைய முறிகண்டிக்குளம், ஐயன்கன்குளம், மருதங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், தென்னியங்குளம் ஆகிய குளங்களில் கீழ் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இவ்வாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது, மழை காலம் ஆரம்பித்துள்ளமையால் விவசாயில் தங்கள் காலபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்ற நிலையில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X