2025 ஜூலை 05, சனிக்கிழமை

தென்மராட்சியில் ஐந்து நாட்களில் 08 பேருக்கு டெங்கு

Princiya Dixci   / 2015 நவம்பர் 06 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான் 

தென்மாராட்சிப் பிரதேசத்தில் இந்த மாதத் தொடக்கத்தின் கடந்த 5 நாட்களில் 8 டெங்கு நோயாளிகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சாவகச்சேரி சுகாதார வைத்தியதிகாரி பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி, கொடிகாமம், வரணி, வட்டுவில், மீசாலை வடக்கு, அல்லாரை, சங்கத்தானை மற்றும் கல்லாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளனர். அடையாளங் காணப்பட்டவர்கள் அனைவரும் அண்மையில் கொழும்புக்குச் சென்று வந்தவர்களாகவுள்ளனர்.

இவர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை, கடந்த மாதத்தின் இறுதி 15 தினங்களில் 13 டெங்கு நோயாளிகள் அடையாளங் காணப்பட்டிருந்ததாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .