Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'சிறுவர் தொழில் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவோம்' என்ற தொனிப்பொருளில் மாபெரும் நடைபவனியொன்று நாளை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெறவுள்ளது.
பண்ணையில் அமைந்துள்ள தொழில் திணைக்கள அலுவலகத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நடைபவனியானது, தொழில் திணைக்களத்திலிருந்து ஆரம்பமாகி மானிப்பாய் வீதியிலமைந்துள்ள வணிகர் கழக கட்டடத்தை சென்றடைவதுடன் மானிப்பாய் வீதியிலுள்ள பிள்ளையார் மண்டபத்தில் சத்தியப் பிரமாண நிகழ்வும் ஒன்று கூடலும் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் தொழில் மற்றும் தொழிற் சங்க உறவுகள் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.கோட்டபாய ஜயரட்ன மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் திருமதி எம்.டி.சி.அமரதுங்க ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago