Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 14 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக மீனவர் ஒருவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. குறித்த மீனவரின் சாவில் மர்மம் உள்ளதாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை 8 மீனவர்கள் கஞ்சா போதைபொருளுடன் கைது செய்யப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகின.
பின்னர் கஞ்சா போதைபொருளுடன் மீனவர்கள் கைது என வெளியான தகவல்களை கடற்படையினர் மறுத்தனர். அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன்பிடியில் ஈடுபட்டமையால் தான் 8 மீனவர்களையும் கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த எட்டு மீனவர்களையும் கடற்படையினர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் முயன்ற போது, மீனவர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் பொறுப்பெடுக்கவில்லை. மீனவர்கள் காயமடைந்த நிலையில் காணப்பட்டமையாலும், அவர்களிடமிருந்து படகுகளை மீட்காதமையாலும் மீனவர்களை பொறுப்பெடுக்கவில்லை என நீரியல் வளத்துறை தகவல்கள் தெரிவித்தன.
அந்நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கலையரசன் என்பவரது படகினை இலங்கை கடற்படையினர் மூழ்கடித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
அதேவேளை, காயமடைந்த நிலையில் காணப்பட்ட எட்டு மீனவர்களையும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க மறுத்ததால், அவர்களை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட கடற்பரப்பு நெடுந்தீவு பொலிஸாரின் கீழ் வருவதால் அவர்களை நெடுந்தீவு பொலிஸாரே பொறுப்பேற்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தமிழகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த மாரிசாமி எனும் மீனவரின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை (13) இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் அல்லது காயமடைந்த நிலையில் கடற்படை முகாம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை காயமடைந்துள்ள எட்டு மீனவர்களில் எவரும் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படாது கடற்படையினரே சிகிச்சை அளித்து வருகின்றார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
28 minute ago
42 minute ago