2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘தமிழ் பத்திரிகைகளை மஹிந்த வாங்கிவிட்டார்’

Editorial   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

“2 தமிழ் பத்திரிகைகளை, முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வாங்கிவிட்டதாக” தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். கரவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் வீட்டில் நேற்று (04) மாலை இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2 தமிழ் பத்திரிகைகளை மஹிந்த ராஜபக்ஷ வாங்கிவிட்டார். அந்த தகவல் இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை (04)) தான் கிடைத்தது.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன யாழ் வரும் போது கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியவர்கள், முன்னாள் ஜனாதிபதி வந்த போது எங்கே சென்றார்கள்” என கேள்வி எழுப்பினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .