2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

திருநெல்வேலி வைத்தியசாலையில் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்புக்கு

எம். றொசாந்த்   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். திருநெல்வேலியிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டபோது, கண்ணில் கிருமித் தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரில், ஐந்து பேரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை கண்புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்கள் ஒன்பது பேர், கிருமித் தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஐந்து பேருக்கு மேலதிக சிகிச்சை வழங்குவதற்காக, கொழும்புக்கு மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொண்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .