2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நெடுந்தீவில் கைதான மீனவர்களுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 10 பேரையும், எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று(07) உத்தரவிட்டார்.

விசைப்படகொன்றுடன் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரை, காங்கேசன்துறை கடற்படையினர், நேற்று (06) கைதுசெய்திருந்தனர்.

அவர்களைப் பொறுப்பேற்ற கடற்றொழில் நீரியல்வளத்துறை, அதிகாரிகள் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X