Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றுக்காக சென்று விட்டு திரும்பிய குடும்ப பெண் ஒருவரை வெள்ளை வான் ஒன்றில் வந்த கும்பல், நேற்று புதன்கிழமை (14) மதியம் கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இராசலிங்கம் ஜனாகி (வயது 32) என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்கு முடிவடைந்து தனியார் பேருந்தில் கம்பர்மலையில் உள்ள வீட்டுக்;கு வந்திறங்கிய போது, எதிரே வந்த வெள்ளை வான் இருந்தவர்கள் இவரது வாயினை பொத்தி வானில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago