Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பின்வீதியில் இருந்து மதுபானம் அருந்திய பெண் மற்றும் முதியவரை, இன்று வியாழக்கிழமை (10) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் மற்றும் 60 வயதுடைய முதியவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இருவரும், பொலிஸாரைக் கண்டதும் அதனை நிலத்தில் ஊற்றியுள்ளனர். அவர்களைக் கைது செய்து விசாரணை செய்தபோது, அவர்கள் உடமையில் 13,000 ரூபாய் பணம் இருந்துள்ளது.
இருவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
2 hours ago