Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ். புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம், நாளை (02) கூடவுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள வழக்கு விசாரணைகளில், புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கை விசாரணை செய்து வந்த பிரதான விசாரணை அதிகாரி அலெக்ஸ்ராஜாவின் மீதிச் சாட்சியம் பதிவு செய்யப்படவுள்ளது.
ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தில் இடம்பெற்றுள்ள 3 நீதிபதிகளில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனும் ஒருவராவார்.
இந்நிலையில், இளஞ்செழியனை இலக்கு வைத்து கடந்த 22ஆம் திகதி நல்லூர் - தெற்கு வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில், நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தார்.
இதையடுத்து, கடந்த 26ஆம் திகதி உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திரவின் இறுதிச்சடங்கு இடம்பெற்றமையால், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொலிஸார் இறுத்திச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, ட்ரயல் அட் பார் விசாரணைகள், நாளை வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .