2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணை தகாத உறவுக்கு அழைத்தவருக்கு தர்ம அடி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி வல்லை வீதியில் செவ்வாய்க்கிழமை (25) இரவு தனிமையில் சென்ற பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த குடும்பஸ்தரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தர்ம அடி கொடுத்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அச்சுவேலியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் மதுபானம் அருந்திய நபர், வீதியால் சென்ற பெண்ணின் பின்னால் சென்று பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

பெண் கூக்குரலிட, அருகில் நின்றிருந்த இளைஞர் ஒன்றுகூடி குறித்த நபரை தர்ம அடி கொடுத்துள்ளனர். சந்தேகநபர் அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் கூறினர்.

 மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .