2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Thipaan   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாண புதிய  சிரேஸ்ட பிரதிப்  பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள டபிள்யூ.எப்.யூ.டி.பெர்ணான்டோ தனது கடமைகளை புதன்கிழமை (14) பொறுப்பேற்றுக்கொண்டார்.

வடமாகாண சிரேஸ்ட பிரதிப்  பொலிஸ்மா அதிபராக  இருந்த லலித் ஏ ஜெயசிங்க, கொழும்புக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை, பலாலி விமான நிலையத்துக்கு வருகை தந்த இவரை யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் வரவேற்று காங்கேசன்துறையில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் மங்கல விளக்கேற்றிய பின்னர் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X