2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பூநகரி ஆசிரியர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

போக்குவரத்து வசதிகள் இன்றியும் பாடசாலைகளிலுள்ள வளப்பற்றாக்குறைகளினாலும் கிளிநொச்சி, பூநகரி கல்விக் கோட்ட ஆசிரியர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என பூநகரி கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் தர்மரத்தினம் தெரிவித்தார்.

கிளிநொச்சி வேரவில் இந்து மகா வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடரர்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி கல்வி வலயத்திலே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த கல்விக் கோட்டமாக பூநகரி விளங்குகின்றது.

ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குச் சென்று வருவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்கள் பாடசாலைகளில் தங்கி நின்று பணியாற்ற முடிவுகள் எடுக்கின்ற போதும், பாடசாலைகளில் அதற்கேற்ற வசதிகள் இல்லாத நிலைமையும்  காணப்படுகின்றன.

எல்லாவற்றையும் சமாளித்து மாணவர்களின் கல்வியினை வளர்த்தெடுக்கவேண்டுமென்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற பூநகரிக் கோட்ட ஆசிரியர்களின் சேவைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X