2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘பண்ணைக் கடற்கரைப் பகுதியில் அரச பொது ஓய்வு விடுதி வருகிறது’

Editorial   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மைகருதி, பண்ணைக் கடற்கரைப் பகுதியில் பெரியளவிலான அரச பொது ஓய்வு விடுதியொன்று 360 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படுவதாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜி.கே. குணதிலக தெரிவித்தார். 

 இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

 “இந்த விடுதி யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் பண்ணை கடற்கரைப் பகுதியை அண்டி யாழ். சிறைச்சாலைக்கு அண்மையில் அமைக்கப்படுகிறது.  

 “40 அறைகளை கொண்ட சகல நவீன வசதிகளுடன் மக்கள் பயன்படுத்தும் விதமாக இந்த விடுதி அமைக்கப்படுகிறது. தற்போது முதற்கட்ட கட்டுமானப் பணிகள், கடற்கரை பகுதியில் மண் நிரப்பப்பட்டு 60 மில்லியன் ரூபாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் இந்த ஓய்வு விடுதியின் கட்டுமானங்கள் 300 மில்லியன் ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு அழகிய இரண்டுமாடிக் கட்டடத்துடன் அமையவுள்ளது. 

“பண்ணை சுற்றுலாக் கடற்கரையை அண்டி அமையவுள்ள இந்த ஓய்வு விடுதியால், மிகுந்த பயனை சுற்றுலாப் பயணிகள் பெறுவர். அத்துடன், யாழ். மாவட்டச் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கும் இந்த விடுதிப் பங்களிப்பை செய்யும் என எதிர்பார்க்கின்றோம்.  

“ஏற்கெனவே மண்கும்பான் பகுதியில் அரச பொது ஓய்வு விடுதி நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கான அரச பொது விடுதி யாழ்ப்பாண நகரிலும் அமைக்கப்படுகின்றது” எனத் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X