2025 ஜூன் 21, சனிக்கிழமை

பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவாசப் பிரச்சினை காரணமாக, வவுனியா - பம்பைமடு இராணுவ முகாமிலிருந்த 14 இராணுவ வீரர்கள், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், இன்று (22) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பம்பைமடு இராணுவ முகாமில் நேற்று (22) காலை இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், இராணுவத்தினருக்குத் திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 14 இராணுவ வீரர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டனர்.

அத்துடன் மேலும் பல இராணுவ வீரர்களுக்கு, பம்பைமடு இராணுவ முகாமில் முதலுதவிச் சிகிச்சையளிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .