Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்ரமணியம் பாஸ்கரன்
தோண்டப்பட்ட இடத்தில் வெடிப்பொருட்கள் எதுவும் கிடைக்காதையடுத்து, அகழ்வுப் பணிகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் இதுதொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதுடன், நீதிமன்ற உத்தரவுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுகப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டன.
சமாதான நீதவான்கள் இருவர் மற்றும் கிராம அலுவலர் முன்னிலையில் இவ் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
இவ்இடத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தடுப்பிலுள்ள முன்னாள் போராளியொருவர் வழங்கிய தகவலுக்கு அமைய கிளிநொச்சி பொலிஸாரால் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான், குறித்த இடத்தை அகழ்வு செய்வதற்கான அனுமதியை வழங்கியதை தொடர்ந்து இவ்விடத்தில் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வின்போது வெடிப்பொருட்கள் உட்பட வேறு எந்த பொருட்களும் கிடைக்காததால் அகழ்வுப்பணியை இடைநிறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago