2025 ஜூன் 30, திங்கட்கிழமை

‘பஸ் நிலையத்தில் அனுஷ்டிக்க ஏற்பாடு’

Editorial   / 2017 நவம்பர் 26 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

தென்மராட்சிப் பகுதிக்கான மாவீரர் தினம், இம்முறை சாவகச்சேரி நகர மத்தியில் உள்ள பஸ் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.  

தென்மராட்சியின் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதால், இந்த வருடத்துக்கான மாவீரர் தினம், சாவகச்சேரி நகர மத்தியில் மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது, பிரதான ஈகைச்சுடரை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றுவாரென்றும் இந்நிகழ்வில், தென்மராட்சியில் வசிக்கின்ற மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வேண்டுமென்றும், ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X