2025 ஜூன் 28, சனிக்கிழமை

பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய இறுவட்டுக்கள் மீட்பு

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி-இராமநாதபுரம் பகுதியில்  இருந்த எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் பழைய முகாம் ஒன்றிலிருந்து இறுவட்டுக்கள் சில மீட்கப்பட்டுள்ளது.

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் வீரத்தை பிரதிபலிக்கக் கூடிய இறுவட்டுக்களே இராமநாதபுரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தை மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட பின்னர் வீடுகள் அமைப்பதுக்காக இடத்தின் உரிமையாளர்கள்  அத்திவாரம் வெட்டும் போதே பாதுகாப்பான கொள்கலன் ஒன்றிலிருந்து 91 இறுவட்டுக்களும், 61 பாதுகாப்பு உறைகளும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இறுவட்டுக்களில் வயதானவர்களுக்கு மட்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .