Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 17 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில், திங்கட்கிழமை (15) மாலை, நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தி, சட்டவிரோதமாக கூட்டத்தை ஒன்றுகூட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை, ஜூன் வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல், நேற்று (16) உத்தரவிட்டார்.
இவர்களில், இருவர் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதால், அவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் நீதவான் ஏ.பீற்றர் போல் கடுமையாக எச்சரித்து, ஒரு இலட்சம் ரூபாய் ஆள்பிணையில் விடுவித்தார்.
“சந்தேக நபர்கள், வன்முறை ஒன்றுக்குத் தயாரான நிலையில் இருந்த வேளையில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களின் கைவிரல் ரேகைகள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன” என, நீதவானின் கவனத்துக்கு பொலிஸார் கொண்டுவந்தனர்.
வழக்கை ஆராய்ந்த நீதவான், ஏனைய 24 பேரையும் வரும் ஜூன் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் வன்முறைக்குத் தயாராகினார்கள் என்று பொலிஸார் தெரிவித்த போதும், வாள் உள்ளிட்ட எந்தவொரு சான்றுப்பொருளையும் மீட்டு நீதிமன்றில் முன்வைக்கவில்லை.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் சில ஊடகங்கள், “ஆவா குழுவின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடியோர் கைது” என செய்திகள் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago