Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
எம். றொசாந்த் / 2018 ஜனவரி 23 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின், சந்தேகநபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை நீடித்து, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று (23) உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி, அரியாலை கிழக்கு மணியம்தோட்டம், முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்ற இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
குறித்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டு, யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (23) யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விசாரணைகள் தொடர்வதால், சந்தேகநபர்கள் இருவரையும் பெப்ரவரி 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago