Janu / 2026 மார்ச் 10 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், நயினா தீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்ததில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நயினா தீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் 35 வயதுடைய நிரந்தரப் பூசகருக்கும், நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமித்தம் சென்றிருந்த குருக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமாகியுள்ளது.
இச்சம்பவத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த 40 வயதுடைய கிருஷ்ணகுமார் என்ற குருக்கள் உயிரிழந்துள்ளார். இவர் வழமையாக நயினா தீவு ஆலயங்களுக்குத் தொழில் நிமித்தம் சென்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய நயினா தீவு பூசகரை இலக்கு வைத்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026