2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பெண் வேட்பாளருக்கு அச்சுறுத்தல்

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாநகர சபை தேர்தலில் போட்டியிடும், தமிழர் விடுதலை கூட்டணியின் பெண் வேட்பாளர் ஒருவரை, ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று மிரட்டியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (06) தெரிவித்தனர்.

‘தனது வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) மாலை ஆறு பேர் கொண்ட குழு ஒன்று வந்து, இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளுமாறு மிரட்டிச் சென்றனர்’ என குறித்த பெண் வேட்பாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .