2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த, பெண்ணின் சடலம் நேற்று (31) மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

22 வயதுடைய அன்ரன் உதயராஜ் டிலக்சி என்ற பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர் வெளியே சென்று வீட்டுக்கு திரும்பிய வேளை, வீட்டின் அறையில் பெண்ணின் சடலம் தென்பட்டுள்ளது.

எனினும், வீட்டிலிருந்த பொருட்கள் சிதறி காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

வீட்டில் குறித்த பெண் தனித்திருந்தவேளை, திருடுவதுக்காக உள்நுழைந்த திருடர்கள் குறித்த பெண்ணை கொலை செய்திருக்கலாம். எனினும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .