2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் சோதனைச் சாவடி தீக்கிரை

Editorial   / 2018 மார்ச் 29 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் பொலிஸாரால் மணியந்தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பொலிஸ் சோதனை சாவடி நேற்று (28) இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில், மணல் கடத்தல், களவு, போதைப்பொருள் வியாபாரம் என்பன அதிகமாக இடம்பெறுகின்றன.

இதனைத்தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் பொலிஸாரால், சோதனை சாவடி ஒன்று அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனைச்சாவடியில் நிரந்தரமாக பொலிஸார் தங்கி நிற்பதில்லை.

இந்நிலையில் நேற்று (28) இரவு குறித்த சோதனைச்சாவடி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .