2025 ஜூலை 19, சனிக்கிழமை

முல்லைத்தீவில் 3,256 காணிகளற்ற குடும்பங்கள்

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், 3,256  குடும்பங்கள் காணிகளின்றி உள்ளதாக மாவட்டச் செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது 41,322 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. இந்நிலையில் 3,256 குடும்பங்கள் காணிகளற்ற நிலையில் காணப்படுகின்றன.

அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய் ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளில் 902 முஸ்லிம் குடும்பங்களும் 270 சிங்கள குடும்பங்களும் உள்ளடங்கலாக 3,256 குடும்பங்கள் காணிகளற்ற குடும்பங்களாக காணப்படுகின்றன.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் வெலிஓயா ஆகிய பிரிவுகளில் காணிகளற்ற குடும்பங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X